கம்பராமாயணம் பக்தி இலக்கியம் மட்டுமல்ல மிகுந்த கவிநயம் மிகுந்தது என்பது நாம் யாவரும் அறிவோம். மிகக் கடினமான விஷயங்களை கம்ப சூத்திரம் (like rocket science) என்று சொல்லுவதுண்டு. அந்த அளவிற்கு கம்பர் தன்னுடைய பாடல்களில் தன் திறம் காட்டியுள்ளார். அவ்வகையில் சோம வள்ளியப்பன் அவர்கள் கம்பராமாயணத்தில் உள்ள மேலாண்மை தத்துவங்களை பட்டியலிட்டுள்ளார்.
Formal vs Informal leader: சில தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள், சிலர் உருவாகிறார்கள். ராமன் தானாக உருவான தலைவன், தனக்கு அரச பதவி இல்லாத போதும், சுக்கிரீவன், விபீடனன் எனப் புதியவர்களை இணைத்து தனக்கான படையை தானே உருவாக்கியவன் (Informal leader).
Leadership Style: Authoritarian (autocratic), Participative (democratic). Delegative (laissez-faire): ராமன் எல்லோரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்கும் (participative) தலைமைப்பண்பைக் கொண்டவன். விபீடனனை தங்களோடு இணைத்துகொள்வதா? வேண்டாமா? என்றகட்டத்தில் சுக்ரீவன், சாம்பன், நீலன், அனுமனின் கருத்துக்களைக் கேட்டபின்பே முடிவெடுக்கிறான் ராமன். எல்லோருடைய கருத்தையும் கேட்டு, பின் ஒரு முடிவெடுத்து தன் முடிவுக்கான காரணத்தையும் விளக்கி அதை அனைவரும் ஏற்கும்வண்ணம் செய்கிறான்.
அப் பொழுது, இராமனும், அருகில் நண்பரை,
'இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர் - இவன்
கைப்புகற்பாலனோ? கழியற்பாலனோ?-
ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்' என்றான்.
Team Player: இந்நிகழ்வில் இன்னொரு செய்தி, விபீடனனை சேர்த்துக்கொள்ள அனுமன் பல காரணங்களை சொல்கிறான், (1) விபீடனன் இலங்கை அரசவையில் தர்மத்தின் பக்கம் நின்றவன், (2) விபீடனன் மனைவி (திரிசடை) சீதைக்கு உதவுகிறாள், (3) இராமன் அசுரர்களை அழித்தான் என்பது அறிந்தே வந்திருக்கிறான். இப்படி வலுவான காரணங்கள் இருப்பினும் அனுமன் ராமன் கேட்கும் வரை இவற்றை சொல்லவில்லை, தனக்கு முன் பலர் விபீடனனை சேர்க்கவேண்டாம் என்று சொல்லிவரும் வேளையிலும் அனுமன் நிதானமாக இருக்கிறான். இந்த நிதானம் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுத்து கேட்பது ஒரு நல்ல குழு உறுப்பினருக்கு அடிப்படை.
"கொல்லுமின், இவனை" என்று அரக்கன் கூறிய
எல்லையில், "தூதரை எறிதல் என்பது
புல்லிது; பழியொடும் புணரும்; போர்த் தொழில்
வெல்லலாம், பின்னர்" என்று இடை விலக்கினான்.
'அன்னவன் தனி மகள், "அலரின்மேல் அயன்
சொன்னது ஓர் சாபம் உண்டு; உன்னைத் துன்மதி,
நன்னுதல்! தீண்டுமேல், நணுகும் கூற்று" என,
என்னுடை இறைவிக்கும் இனிது கூறினாள்.
'"பெற்றுடைய பெரு வரமும்,
பிறந்துடைய வஞ்சனையும், பிறவும்,
உன் கை வில் தொடையின் விடுகணையால்
வெந்து ஒழியும்" எனக் கருதி, விரைவின் வந்தான்;
Story telling: இதில் இன்னொரு செய்தியும், ராமன் விபீடனை தங்களோடு இணைத்துக்கொள்ளலாம் என்று முடிவுசெய்கிறான், அதற்காக அவன் காரணங்களை பட்டியலிடுகிறான். கஜேந்திர மோஷம், மார்கண்டேயன், சிபியின் கருனை, சிவன் விஷம் அருந்துவது என பல கதைகளை பட்டியலிட்டு ஆபத்து என்று வருபவர்களுக்கு அபயம் தருவது கடமை என்கிறான். இவ்வகையில் தலைமைக்கு உரிய கதைகளின் மூலம் மேற்கோள் காட்டும் பண்பை இயம்புகின்றான்.
'ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய தானம்
ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர், என்பால் வைத்த
காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த!
கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி' என்றான்.
Strategy: ஒரு செயலில் வெற்றிகிட்ட வியூகம் முக்கியம், அவ்வகையில் சூர்பனகை முக்கு அறுபட்டு தன் அண்ணனிடம் சென்று முறையிடுகையில் சீதையின் அழகை ஏற்றி சொன்னது வியூகமே. இன்னொரு சம்பவம் சீதையைத் தேட உதவுவதாக கூறிய சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு அரசனானதும் தன்னுடைய உறுதிமொழியை மறக்கிறான், அதனால் போபமாக செல்லும் இலக்ஷ்மணனை எதிர்கொள்ள அனுமன் அங்கே வாலியின் மனைவி தாரையை நிறுத்துகிறான். அது இலக்ஷ்மணனின் கோவத்தை தணிக்கிறது, தாரையை கண்ட அவன் தன் தாயை நினைவு கூறுகிறான் (Empathy).
'அன்னவள்தன்னை நின்பால் உய்ப்பல் என்று எடுக்கலுற்ற
என்னை, அவ் இராமன் தம்பி இடைப் புகுந்து, இலங்குவாளால்
முன்னை மூக்கு அரிந்து விட்டான்; முடிந்தது என் வாழ்வும்; உன்னின்
சொன்னபின், உயிரை நீப்பான் துணிந்தனென்' என்னச் சொன்னாள்.
'அனையன் உள்ளமும் - ஆய்வளையாய்! - அலர்
மனையின் வாயில் வழியினை மாற்றினால்,
நினையும் வீரன் அந் நீள் நெறி நோக்கலன்;
வினையம் ஈது' என்று அனுமன் விளம்பினான்.
Loyalty vs Righteous: இராவணனுக்கு இரண்டு தம்பி விபீஷணன், கும்பகர்ணன். இருவரும் இராவணன் செய்தது தவறு என்று சொன்னார்கள், ஆனால் விபீஷணன் அறத்தின் பக்கம் இருக்க அண்ணனை பிரிகிறான். ஆனால் கும்பகர்ணன் தர்மத்தைவிட அண்ணன் என்கிற விசுவாசம் முக்கியம் என அவனுக்காக போரிடுகிறான். இதில் சிறந்த முடிவு என்று ஒன்று இல்லை, அறம் என்ற வகையில் விபீஷனனும், விசுவாசம் என்ற வகையில் கும்பகர்ணனும் முதன்மை பெருகிறார்கள்.
'நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நாள் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்,
கார்க் கோல மேனியானைக் கூடிதி, கடிதின் ஏகி,
Ethics: படைகளை இழந்து நிற்கும் சம்புமாலியை அனுமன் தாக்காமல் விடுகிறான், படையை இழந்து நிற்கும் இராவணனை ‘இன்று போய் நாளை வா’ என்கிறான் ராமன், சொந்தங்களை இழந்து மடியும் இராவணனுக்கு ஈமைக் கடன்களை செய்ய விபீஷணனை பணிக்கிறான். இப்படி இராமாயண காதை முழுதும் நன்நெறிக்கு பல உதாரணங்கள் உண்டு.
Differentiating Rewards: சுக்ரீவன், அங்கதன், ஹனுமன் என் எல்லோருக்கும் பரிசு கொடுக்கப்படுகிறது, அங்கதனுக்கு தன் சிற்றப்பாவோடு இணக்கமாக இருக்க வேண்டும் என்று இராமன் அறிவுரை வழங்கி பரிசு அளிக்கிறான். அனுமனுக்கு தன்னை கட்டித்தழுவ வாய்ப்பு அளிக்கிறான். இவ்வகையில் அவர் அவர்களின் தேவை அறிந்து, அவர் அவர்களின் பங்களிப்பையும் பொருத்து பரிசுகள் தரப்படுகிறது.
இப்படி பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய Management Guru கம்பன் புத்தகம் நம் கிங்கவுன்டி நூலகத்தில் கிடைக்கிறது.
என் உரை: https://www.youtube.com/watch?v=dPnFCnkPpu8
சோம வள்ளியப்பன்: https://www.youtube.com/watch?v=Ia5HpDhWOFU
புத்தகம்: மேனேஜ்மெண்ட் குரு கம்பன் – சோம. வள்ளியப்பன்
https://kcls.bibliocommons.com/v2/record/S82C1954046
புத்தகம் காட்டும் நிர்வாக கோட்பாடுகளும், யுக்திகளும்
பன்முகத்தன்மை: Diversity
தலைமை பண்புகள்: Leadership qualities
- Participatory style of leadership
- Finding out the facts not jumping to conclusions
- Taking personal responsibility
- Leadership qualities
- Ethics
- பகைவனுக்கு அருள்வாய்
- Following the protocol under any circumstances
- அனுமனின் அடக்கம்: நான் அடிமைத் தொழில் புரியும் பணியாளன், நாயினும் கடையேன் நான்.
- அதிகார அடுக்கை பின்பற்றுதல்.
- ராமன் பின்பற்றாத நீதி நெறியா? (வாய்ப்பு கொடுப்பது, ஆழமான மதிப்பீடுகள், இன்று போய் நாளை வா, போட்டியாளர்க்கு வாய்ப்பு)
குணாதசியம்
- நன்றி பாராட்டுதல்
- தன்னடக்கம்
- தன்னிடம்றிந்து நடத்தல்
- கம்பனின் தன்னடக்கம்
- விசுவாசம்
- மலையும் காட்டுகிறது விசுவாசம்
- ராமனுக்கு தாயல்லவா?
- வாலியின் மேன்மை
- பெரியவர்களுக்கு மரியாதை
- மற்றவர்களை மதித்தல்
- காலில் விழ வேண்டாம்
- பெண்களுக்கு கூடுதல் மரியாதை
- முடிவுக்கு கட்டுப்படுவது
- மரியாதை காட்டும் விதம்
முக்கிய பணி: Mission
- Not to underestimate குறைத்து மதிப்பிடலாகாது
- Being focused எடுத்த செயல் மீது கவனம்
- Understanding the criticality நிலையின் தீவிரத்தை உணர்ந்து செயல்படுதல், நிலைமை அறிந்து நடந்து கொள்ளுங்கள்
- Sence the urgency அவசரம் புரிந்து நடத்தல்.
- Focus கவனக்குவிப்பு
- Clarity in thinking சிந்தையில் தெளிவு
ஆட்ட வியூகம்: game plan strategy
- Strategy
- வாலியைக் கொல்ல ஒருவழி.
- இந்திரஜித்தின் யுத்த தந்திரம்
- கும்ப கர்ணன் சொல்லும் யோசனை.
- வம்புக்கு இழுப்பது Disturbing and provoking
- ஏற்பாடு Agreement
- எதிரியைச் சரியாக மதிப்பிடுதல் Estimating the opponent competition
மனிதவள நிர்வாகம்: human resource management
- வள ஒதுக்கீடு Resource allocation
- விபீடணனையும் இலக்குவனுடன் போய் இருக்கச் சொல்லுதல்.
- வேலைக்கு ஏற்ற நபர் தேர்வு Selecting a right person
- தகுதி அடிப்படையில் தேர்வு Selecting on merit
- இதனை இதனால் இவன்முடிப்பான்.
- குழுவாய் பணியாற்றுதலும் ஈடுபடுத்தலும் Teamwork and involvement
- சரியான மதிப்பீடு Realistic self appraisal
- Perception
- தேவர்களும் விதிவிலக்கல்ல
- ஆழ்ந்த ஆலோசனை In deep discussion
- குழுவின் வெற்றி மமதை Group Think
- ஊக்குவித்தல் Motivation
- அதிகாரம் கொடுப்பது Empowerment
- இந்திரஜித்தன் தந்தையை குற்றம் சொல்லுவது, அங்கதன் ஆகியோரும்,
- அங்கீகரிப்பும் வெகுமதிகளும் Rewards and recognition
- தன் குழுவில் உள்ளோரின் சாதனைகளை அங்கீகரித்தல் Acknowledging team members achievements
- அனுமனும் அவ்வழி
- வெகுமதிகள் கொடுப்பது
- பொருட்கள் தவிர ஏனைய வெகுமதி Non monetary rewards
- யாரை வைத்து கொடுப்பது?
கலந்தாலோசனை: consultation
- ராமன் கலந்து ஆலோசித்தல்
- ராவணன் கலந்து ஆலோசித்தல்
- குழு உருவாக்கம்
குழு உருவாக்கம்: team building
- குழுவினரை தலைவன் பாராட்டுதல்
- பிறர் செய்த உதவியை குறிப்பிடுதல்
தகவல் பரிமாற்றம்: communication
- பணிவு கலந்த வினவல்
- இதை செய்கிறாயா? அல்லது.
- தொடர்பு கலையில் எளிமை மிக முக்கியம்
- சொல்லுவது முழுவதையும் கேட்க ஆயத்தப்படுத்துவது
- எதை எப்படி பேச வேண்டும் என்று திட்டமிடுதல்
- எதை சொன்னால் எடுபடும்மோ அதை
- சீதை மறுமொழி
- அனுமன் சீதையிடம் பேசுங்கள்
- சுய அறிமுகம் Self introduction
- சொற்களற்ற செய்தி பரிமாற்றம் Nonverbal communication
- அவை தெரிந்த செய்திகள்
- பார்வை ஒன்றே போதுமாம்
- கண்டனன் சீதையை
- தேவையான அளவு விவரங்கள்
- கண் ஜாடைக்கு மேல் என்ன வேண்டும்?
உணர்வு புத்திசாலித்தனம்: emotional intelligence
- உணர்வைத் தூண்டி காரியம் சாதித்துக்கொள்வது
- உணர்வு கடத்தல் Emotional hijack (சீதை லட்சுமனை நீ இங்கே நிற்பது நீதி அல்ல என்று சொல்லி இராமனைத் தேட பாகசொல்லுதல், அநுமனின் அரற்றல்: போரில் பொம்மை சீதையைப்பார்த்து அழுவது, ராம, லக்ஷ்மனரும் துயர் அடைகிறார்கள். விழுகிறார்கள்)
- உணர்வை தூண்டுதல் Emotional provocation
- சுய நெறிமை Self-regulation (அசோக வனத்தில் அனுமன், தன்னை சரிப்படுத்திக்கொள்ளல்)
- பிரதிபலித்தர் Reflection
- உடனடி மனப்பான்மை, உள்ளுந்துதலைத் தவிர்த்தல் Impulsive control
- Sympathy, empathy, apathy (கேட்ட பின்பே பேசும் அனுமன், மற்றவர் உணர்வை உணர்வது empathy)
- எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் காரணங்களை பகிர்ந்து கொள்ளுதல் People’s skills share thoughts rational and feelings
- நம்பிக்கை trust (ஹனுமன் மீது சுக்ரீவன் நம்பிக்கை)
ஏனைய நிர்வாக உத்திகள்: General Management thoughts
- எப்படி ஆட்சி நடத்த வேண்டும்? How to govern?
- பிணக்கு தீர்ப்பது? Conflict resolution
- பேச்சுவார்த்தை திறன் பேரம் பேசும் சாதுரியம் Negotiation skills
- தகுதிக்கு ஏற்றவருடன் போரிடங்கள் live up to your standards
- ஈகைக்கு உட்பகை உலோபம் Corporate social responsibilities
- நெற்றிக்கண்ணை திறப்பினும் whistle blowing
- எல்லோருக்கும் ஒரு பணி பங்கேற்பு Role