கயிலைனாதனை போற்றிடும் பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்
இறைவனை தொழ நாம் செய்யும் ஐந்து செயல்கள் :
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்
ஈசனின் பஞ்சாட்சரம் ஐந்து அவை:
நமசிவாய – தூல பஞ்சாட்சரம்
சிவாயநம – சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ – காரண பஞ்சாட்சரம்
சி- மகா காரண பஞ்சாட்சரம்
சிறப்புமிக்க சிவமூர்த்தங்கள் ஐந்து
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் – கருணா மூர்த்தி
சிவபெருமானின் பஞ்சலிங்க திருத்தலங்கள் ஐந்து
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்
அப்பன் கூத்தாடும் பஞ்சவனதலங்களின் பெயர்கள் :
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்
சுடலைநாதனின் பஞ்ச ஆரண்ய தலங்களின் பெயர்கள் :
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி
கூத்தபிரானின் பஞ்ச சபைகள் :
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
திருக்குற்றாலம் -சித்திர சபை
எம்பெருமான் ஆடும் ஐந்து தாண்டவங்கள்
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்
உலகாளும் ஈசனின் முகங்கள் ஐந்து
1.ஈசானம் – மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு
சங்கரன் புரியும் ஐந்தொழில்கள்
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்
சொக்கனின் பஞ்சபூத தலங்கள்
1.நிலம் – காஞ்சிபுரம்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை
மாதொரு பாகனுக்கு உகந்த பஞ்ச வில்வம்
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்
அம்மையப்பனின் நிறங்கள் ஐந்து:
1.ஈசானம் – மேல் நோக்கி – பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு – பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு – கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு – சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு – வெண்மை நிறம்
ஆண்டவனுக்கு நாம் செய்யும் பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல். சிவாயநம அருணாச்சலம்
நமசிவாய ஐந்தெழுத்து மந்திரம் நம் வாழ்வை மேம்படுத்தும். பாவங்கள் அனைத்தையும் நீக்கி புது வாழ்வு தரும்.
ஓம் நமசிவாய நாதன் தாள் போற்றி போற்றி