Translation of Sundari Sridharan article in English
ஹாலோவீனுக்கு முன் வாரத்தில் தான்! புடவைகட்டிகிட்டு, கோலமிடு, சுண்டல் சாப்பிடு, தீபாவளி பட்சனம் வினியோகிச்சி, பட்டாசு வெடிச்சி, விருந்துக்கு கூப்பிட்டு, விருந்துக்கு சென்று, போட்டோக்கு போஸ் கொடுத்து, ஈன்னு பள்ளிளிச்சு… (வருஷஷா வருஷம் செய்யர கூத்துதான்… உங்களுக்கு தெரியாததா?) இந்த கூத்து முடிஞ்சி இனிமே இந்த வருஷம் முடியர வரை தூங்கலாம்னு போன போது. என் டீன் ஏஜ் மகன் சூர்யா மயக்கத்தில் இருந்து விழித்து, ஹாலோவீனுக்காக ஏதாவது சுவாரஸ்யமா செய்யனும்னு ஞானதிரிஷ்டியோட வந்தான்! “ஹாலோவீன் நம்ம கலாச்சாரம் இல்ல” என்றேன். அம்மா, மகனுக்கு இடையே ஒரு வலுவான உள்நாட்டு சண்டை! “இந்த சின்னபிள்ளதனத்திலிருந்து வெளிய வாடா” என்ற பிரம்மாஸ்திரத்துக்கும் பலனின்றி அவன் தான் வெற்றிகொண்டான்!
ஹாலோவீனுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மந்தநிலையிலிருந்து திங்கள் மேஜிக் மேனியா வரை குடும்பத்தை மகிழ்ச்சியுடன் திகைக்கவைக்க தயாரானேன்! எனது கணவர் ஸ்ரீதரிக்குதான் முதல் அதிர்ச்சி வைத்தியம், நவராத்திரி விளக்கை பேய் மாளிகை (உண்மையில் ஒரு பேய் பால்கனி) மாயாஜால விளக்காக மாற்ற ஆணை பிரப்பித்தேன். ஹாலோவீன் அலங்காரத்தில் ஒரே இரவில் மார்தா ஸ்டீவர்ட்டாக மாற, கூகுள் தேடல் மற்றும் யூடியூப் கவனிப்பு என கடமையே கண்ணானேன்! அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை ஹாலோவீன் கடவுள்கள் (இந்த விஷயத்தில்.. பேய்களா?) என் அதியுக்கிர திட்டமிடலைப் பார்த்து சிரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்!
அரை மனதாக நான் முடித்திருந்த என் ஹாலோவீன் பயனத்தின் மிச்ச மீதியை ஸ்வீகரிக்க தயாரானேன். ஆமாம் நான் பள்ளி பெற்றோர்-ஆசிரியர் குழுவில் ஹாலோவீன் பயமுறுத்தலை உருவாக்கிய அனுபவம் (காதித கத்தரிப்பு / ஓரிகாமி), என்னுடைய அலுவலகத்தில் ஹாலோவீன் அதிபயங்கர அலங்கரம் அமைத்தது, மருமகளாக ஹாலோவீன் பற்றி அறியாத என் அப்பாவி மாமனார் (MIL), மாமியாருடன் (DIL) வீட்டில் செய்த ஹாலோவீன் அமர்களங்கள் என ஹாலோவீன் அதிமேதாவி என்ற பெருமிதத்தோடு என் பையனின் கனவுலகை படைக்க பிரம்மனாக முழுமையாக மாறி இருந்தேன்.
நான் எதிர்பார்த்தது போலவே வேலையை இழுத்து போட்டுவிட்டு, அந்த பத்தாம் வகுப்பு மாணவன் “எனக்கு வகுப்புகள் உள்ளன, வீட்டுப்பாடம் செய்ய வேண்டும்” என்று ஜெகா வாங்கினான். எந்த இந்தியப் பெற்றோரும் வீட்டுப்பாடம் என்னும் அஸ்திரத்திற்கு எதிர் பாணம் விட்டதில்லேயே! அதுவே நானும் பின்வாங்குவதற்கான முதல் சமிக்ஞையாகும், ஆனால் நான் என் மகனின் விருப்பத்தை விரைவேற்ற ஹாலோவீன் ஜோதியை ஏந்தி முன் செல்ல முடிவு செய்தேன்! பையன் வைவிடும்போதெல்லாம் ஆபத்பாந்தவனாக இருக்கும் கனவரின் உதவியை நாடினேன். WFHயில் இருந்தவரை எளிதில் வலைபோட்டு பிடித்தேன். அந்த பேய் பால்கனி லைட் எஃபெக்ட்களை மாலை 6 மணிக்குள் அமைத்திட வேண்டும் என்று வரம் வாங்கினேன். மகிழ்ச்சியுடன், ‘சபாஷ் சுந்தரி!’ என்று சொல்லி, எனது கலையுலக ராஜ்ஜியத்தின் கற்பனை சிறகுகளில் அனைத்து அலங்காரங்களும் நிஜமாகி ஜொலித்துக்கொண்டிருந்தது!
நான் மார்த்தா ஸ்டீவர்ட் அல்ல, மாயவரம் மாதுபோனு(டில்) என்ற உண்மையை ஏற்கத் தயாராக இருந்த நேரத்தில் எனது கலையுலகில் பல்பு பியூஸ் ஆனது. இல்லை அகில உலக ஹவுஸ் ஓயிபுகும் சகல மொழிகளிலிலும் பிடிக்காத அந்த செய்தி எனக்கு எட்டியது, ‘இன்று வேலைக்காரி விடுமுறை எடுக்கிறாள்!’ என்பதுதான் அது. என்னுடைய சாகச பயனத்திற்கு சோதனை, மனம் தளர்வேனா நான்? ஆம் கொஞ்சம் தளர்ந்துதான் போனேன். தெனாலி (தமிழ்) திரைப்படத்தின் உரையாடலைப் போலவே, எனது அலங்கார யோசனைகள் சர்வதேச மட்டத்தில் தொடங்கி, தேசியத்திற்கு நகர்ந்து, பின்னர் பிராந்தியத்திற்கு என்று நகர்ந்து தர லோகலாக மாறியது.
அடுத்து ஆயிரம் ஐடியாக்களோடு இருக்கும் அபூர்வ சிகாமனி என் மாமனாரை (FIL) இந்த மெகா பிராஜக்டில் சேர்த்துக்கொண்டார்; ஹாலோவீனில் தேர்ந்த பயிற்சி பெற்ற அமெரிக்க பலமுறை சென்று திரும்பிய தாத்தா அல்லவா அவர், அவர் பூசணிக்காயை செதுக்க ‘நான் ரெடி! நீங்க ரெடியா?’ என கத்தி கபடா என்று தயாரானார்! இது பூச்சாண்டி லைட் தீம் ஹாலோவீன் இதில் பூசணிக்காய் எல்லாம் இல்லை என்று சொன்னதும், நாங்கள் முழு பூசணியை சேற்றில் மறைக்கிறோம் என்று ஊம்மென மூஞ்சை தூக்கிவைத்துக்கொண்டு. முழு பூசணிக்காய் கிடைக்கும் கடைகளை பரிந்துரைத்தார். நல்ல வேலை பையன் ஜகாவாங்கிய பின் இதை சொல்லியிருந்தார். இப்போது என்னுள் இருப்பது அடிபட்ட மார்த்தா! இதுவே நான் முன்னிருந்த உக்கிர நிலையில் சொல்லியிருந்தால், முத்துமாரியம்மன் கழுத்தில் தொங்கும் எலுமிச்சைப்போல வீடு முழுக்க பரங்கிக்காயை (இந்திய பூசணிக்காய்) நிரப்பி, அடுத்த வார மெனுவை “பரங்கிக்காய் வாரம்” என்று அறிவித்திருப்பேன்!
மாலை 6 மணி நெருங்கிவிட்டது, விஷயங்கள் சூடுபிடித்தன, இருட்டிவிட்டது! ஸ்ரீதரின் லைட்டிங் மேஜிக்கைப் பார்த்து என்னை உற்சாகப்படுத்தக்கொண்டேன். முன்கூடம் மின்கம்பிகள், ஜங்ஷன் பாக்ஸ் சூழ கட்டுப்பாட்டு அறையாக மாறியது, நடுநாயகமாக ஸ்ரீதர் தனது மடிக்கணினியுடன் அமர்ந்து அருள்பாளிக்க, அந்த சுவர்கபுரி உதயமாக ஆயத்தமானது! இந்த நேரத்தில்தான் நான் மூச்சை மெல்ல இழுத்து விடும் தியானப் பயிற்சியை மேற்கொண்டு இருக்க வேண்டும். வாழ்வின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் அமைதி, அமைதி என்ற வேள்விகளை நடத்தி இருக்க வேண்டும், ஆனால் அதற்கு நேர் மாறாக, ருத்ர தாண்டம் எடுத்தேன். அந்த நவராத்திரி நாளைப்போல் இரவு 2 மணி வரைக்கும் எல்லாம் ஆகக்கூடாது, இந்த அலங்காரம் ஒரு நாள் கூத்து ஆகட்டும் காரியங்கள் அசுர வேகத்தில் என்று நான் சாமியாடி பொழுதில் அத்தனைக்கும் காரணமான அந்த உருவம் தன்னுடைய வீட்டுப்பாடங்களை முடித்து வெளியே தலைகாட்டியது, என்னுடைய காளிபார்வை டிராகன் கண்களாக அவன் கண்டிருக்க வேண்டும். ஆன் செய்த கிரைண்டர் போல அவனும் களத்தில் சுற்ற ஆரம்பித்தான்.
மூவரும் வீட்டைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தபோது, என் மாமனார் (FIL) இருண்ட அறையில் உட்கார வைக்கப்பட்டார், ஏனென்றால் ஒரு பயமுறுத்தும் பால்கனிக்கு அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு இருண்ட அறை தேவை என்பதை நாங்கள் இப்போது தான் உணர்தோம்! இருட்டு அறையில் இருந்த அவருக்கு திடீரென வந்தது அந்த யோசனை, அவர் தொலைபேசியிலிருந்து சத்தமாக நாதஸ்வர இசையை ஒலிக்கவிட்டார். ஹாலோவின் பேய்கள் குழம்பிதவித்தன. அந்த சரியான தருணத்தில் வீட்டு வாசலுக்கு வந்து சேர்ந்தாள் எங்கள் முதல் ஹாலோவின் விருந்தாளி. வேஷ்டியில் ஒரு தாத்தா இருட்டு அரையில் மொபைல் வெளிச்சத்தில் முகம் மட்டும் தெரிகிறது. இன்னுமொரு வேஷ்டிமாமா, இருட்டில் லேப்டாப் ஒளியில், என் மகனோ பிரிண்டரின் கேபிள்கள் பிடுங்கபட்டதென பெருத்த குரலில் ஓலமிட, நானோ ஒரு நீண்ட தொடப்ப குச்சியோடு ஓட (நம்புங்கள் அந்த குச்சியில் ஒரு சோலக்காட்டு பொம்மை செய்லாம் என்று தான் எடுத்து வந்தேன்). ஒரு நிமிடம் நின்று, இந்த காட்சியை உங்கள் கற்பனைக்கு கொண்டுவாருங்கள். அந்தப் பெண் ஹாலோவின் பேயரைந்தார்போல நின்றாள்.
பயந்து அந்தப் பெண் ஓடிப்போகத் தீர்மானித்தபோது, நான் அவளைக் கூப்பிட்டு, அவளை அமைதிப்படுத்த சாக்லேட்டுகளை தாராளமாக தந்தேன் (இந்த வீடு குழந்தைகள் வருவதற்குமானதுதான் என்பதை நான் பேசித்தான் புரியவைக்க வேண்டி இருந்தது). ஒரு வழியாக அவள் பயந்து அழாமல் சென்றுவிட்டாள் என்று திரும்பியபோது, இந்தனை கலேபரமும் இந்த ஒரு பெண்ணின் வரவுக்காகத்தானா என மாமனார் மூக்கால் அழுதார், இன்னும் அதிகமான குழந்தைகள் வருவார்கள் என்ற வாக்குறுதியுடன் நாங்கள் அவரை அமைதிப்படுத்த வேண்டியிருந்தது.
இறுதியாக எங்கள் மாபெரும் முயற்சி உயிர்பெற்றது. ஸ்ரீதர் தனது நவராத்திரி தொழில்நுட்ப அறிவை நீட்டிக்க முடிவுசெய்து, ஒரு ப்ளூடூத் கீபேடை வெளியே ஒரு நாற்காலியில் வைக்க முடிவு செய்தார்; குழந்தைகள் அதை ஒரு விருந்தாக எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்காக நாற்காலியில் டேப் செய்யுங்கள் என ஐடியா கொடுத்தேன்! சூர்யா “உங்களுக்கு தைரியம் இருந்தால் Enter Keyஐ அழுத்தவும்” என அச்சிட்டு நாற்காலியில் ஒட்டினான்! ஒரு சிறிய ஹாலோவீன் தீம் கொண்ட தானியங்கு ஒளிக் காட்சிக்காக, குழந்தைகள் கீபேடில் Enter Keyஐ அழுத்துவதே திட்டம்! அந்த பெருமையான தருணத்தில், இந்த Enter Key மூலம் நாங்கள் நுழையும் குழந்தையின் உலகம் எப்பேர்பட்டது என்பதை நாங்கள் குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். சூர்யா தனது சாக்லேட் வேட்டைக்காக இருட்டில் நழுவிச் சென்றுவிட்டான். ‘Trick or Treaters’ கோஷ்டிகளை நாங்களே கையாள வேண்டியதானது.
செட்டப் முடிந்த உடன் வருகை தந்த முதல் சிறுவனை முழு குடும்பமும் மிகப்பெரிய ஆரவாரத்தில் வரவேற்றது (எனது ஆர்வமுள்ள FIL உட்பட)! அவன் வீரம் மிக்க நேதாஜி உடையில் இருந்தும் எங்களின் அதிஉற்சாகமான வரவேற்பால் அவன் சற்று அதிர்ச்சியடைந்தான். ஸ்ரீதர் ஒரு நிமிட நீள ஒளிக்காட்சிக்கு Enter Keyஐ அழுத்துவதற்கு பெருமையுடன் வழிகாட்டி, ஆர்வமாய் பார்த்தார், நாங்கள் எங்கள் முதல் வாடிக்கையாளர் கருத்துக்காக ஆவலுடன் காத்திருந்தோம். எங்கள் show முடிந்ததும் அவன் திரும்பி சாவகாசமாகச் சொன்னான்.
‘எனக்கு பிடிச்சிரும் நிறைய விளக்கு மாறி மாறி எரிவதால் காட்சிகள் சரியா தெரியலை’ என்றான். என்னது விளக்கு சரியா எரியலையா, இந்த கருத்தை உள்வாங்க சில நிமிடங்கள் ஆனது, இது ஒரு ஒலி, ஒளி நிகழ்ச்சி என்று அந்த பையன் புரிந்து கொண்டானா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, அவன் தனது அடுத்த கேள்வியைத் தொடுத்தான், “இது எப்படி வேலை செய்கிறது?”
ஸ்ரீதர் ஆர்வமானார், வயர்லெஸ் புளூடூத் என்று அவர் பாடமெடுக்க. குழந்தை மற்றொரு குறுக்குக் கேள்வியை எழுப்பியது, அண்ணே இது எப்படின்னே எரியும் என்ற செந்திலைப்போல அந்த “லெப்டாப்பிலிருந்து இந்த கீபோர்டை மட்டும் எப்படி உடைத்து வெளியே எடுத்தீங்க?”
டிஜிடல் யுகப்புதல்வனிடமிருந்து இப்படிப்பட்ட அப்பாவிதனமான கேள்வியா என அப்படியே ஷாக் ஆனோம், ஸ்ரீதர் அந்த குழந்தையை தமிழ் பையன் என்று அடையாளம் கண்டுகொண்டார். அவனை தமிழில் பேசுமாறு கேட்டு திசை திருப்பினார்; சிறுவன் கீபேட் மேட்டரை கிடப்பில் போட்டுவிட்டு சாக்லேட்டை குடுங்க கிளம்பரேன் என காரியத்தில் கண்வைத்தான்! அவன் சின்னப்பையன், நம்ம ஒலி, ஒளி விஷயமெல்லாம் அவனுக்கு விளங்கவில்லை என்று நாங்கள் எங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டோம், இருந்தாலும் அவன் ரியாக்ஷன் கொஞ்சம் வலிக்கத்தான் செய்தது. இருந்தும் ஸ்ரீதரை சற்று சமாதானம் செய்து வைத்தேன்.
எங்கள் அடுத்த பார்வையாளர்கள் இளம் டீன் ஏஜ் பெண்கள்; அவர்களே அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்; நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் உண்மையான உற்சாகத்தைக் காட்டி எங்கள் முயற்சியைப் பாராட்டினார்கள்; ஒரு பெண் கேட்டாள்: “விளக்குகளையும் இசையையும் எப்படி ஒருங்கிணைத்தீர்கள்?”
ஆழ்ந்த தொழில்நுட்பக் கேள்வியால் ஈர்க்கப்பட்ட நான், அது நிரல்ரீதியாகக் (program) கட்டுப்படுத்தப்படுகிறது என்று பதிலளித்தேன்; அவள் பதிலை உள்வாங்க சிறிது நேரம் எடுத்துக் கொண்டாள், எங்களை ஏற இறங்க பார்த்து ஒரு பட்டையம் வழங்கியனாள்
“அப்படியானால் நீங்கள் இருவரும் கணினி தொழில்நுட்ப வல்லுநர்கள்! அப்படித்தானே”
நான் சிரித்து முடித்துக்கொள்ள திட்டமிட்டிருந்தபோது, ஸ்ரீதர் பொறியாளர் என்பது வேறு, தொழில்நுட்ப வல்லுநர் என்பவர்கள் வேறு என்று (engineers and technicians) வித்தியாசத்தை சிறுமிகளுக்குக் புரியவைக்க முனைந்தார்; பெண்கள் ஏன்டா இவரிடம் பேசினோம், சாக்லேட்டை குடுங்க சட்டுபுட்டுன்னு இடத்த காலி பண்றோம் என்ற ரீதியில் ஏக்கத்துடன் இயந்திரத்தனமாக தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர்; சரி, குழந்தைகள் அவர் போக்கில் இதை இரசிக்கட்டும் என்று விரைவில் நாங்கள் வீட்டிற்குள் செல்ல முடிவு செய்தோம், குழந்தைகள் நிகழ்ச்சியை தாங்களாகவே ரசிக்கட்டும், அதன் பின் மணியை அடிக்கும் போது சாக்லேட் கொடுக்கலாம் என்று நினைத்தோம்.
எங்கள் நடு கூடத்தில் இருளில் ஒளிந்துகொண்டு, ஆவலுடன் குழந்தைகளின் அனுபவங்களை காண வழிமீது விழி வைத்து காத்திருந்தோம். நிறைய குழந்தைகள் எங்கள் நெறிமுறைகளை சந்தமிட்டு படிக்கும் குரல் கேட்டது.
“உங்களுக்கு தைரியம் இருந்தால் Enter Keyஐ அழுத்தவும்”
குழந்தைகள் வழிமுறைகளை முழுமையாக படித்து; விசைப்பலகையில் Enter Key கண்டுபிடித்து, அவர்கள் தங்களுக்குள் தைரியமானவனை தேர்ந்தேடுத்து அழுத்த முனைந்தனர். அவர்கள் அனைவரும் நாற்காலியைச் சூழ்ந்துகொண்டு, Enter Keyயை யார் அதிகமாக அமுக்க முடியும் என்று தங்களுக்குள் காரசாரமாக போட்டிபோட்டனர். இவர்களது சண்டைக்கு இடையே அனாதையாக ஒளிக்காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. யாரும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அறிவுறுத்தல்களுக்கான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்ததற்காக என் மகனை நான் சபித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீதர் கீபேட் படும் அவஸ்தையை சகித்துக்கொள்ள முடியாமல் அதைக் காப்பாற்ற ஓடினார்; அந்த கதவு திறப்பும் சாக்லேட் வரவும் அவர்களின் அந்த போர் குணத்திலிருந்து திசைதிருப்பியது; ஒரு கீபேடும், ஒரு அறிவுறுத்தல் வாசகமும் அந்த அழகிய இசையுடன் கூடிய ஒலி ஒளி நிகழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது;
நிலைமை கைமீறி சென்றுகொண்டிருந்தது; நான் எப்பொழுதும் கடுப்பாவேன் என்றும், ஸ்ரீதர் நிதானமானவர் பெயர் பெற்று இருந்தோம்; ஆனால் இந்த பெரும் குழந்தை பட்டாளம் அவரைப் பிடிக்காமல் கடுப்பேற்றியதை ரகசியமாக ரசித்தேன்! ஸ்ரீதர் பதற்றமடைந்தார். அலிபாபா கதையைப் போல நான் கவலைப்பட்டேன், குழந்தைகள் மற்ற குழந்தைகளை எச்சரிக்க எங்கள் வீட்டிற்கு வெளியே சில அடையாளங்களைச் சேர்க்கலாம்; அதை விட மோசமான விஷயம் என்னவென்றால், ஒரு குழந்தை புகார் கூறிவிட்டு திரும்பிச் சென்றால், நாங்கள் எந்த வாட்ஸ்அப் குழுவின் எலிபாஷனமாக மாறுவிடுவோம் என்று கலவரமடைந்தேன்! (ஸ்ரீதரின் பார்லி-ஜி பட்ஜெட் சாக்லேட்டுகள் குழந்தைகளை வசீகரிக்கவும்மில்லை). விரைந்து சிந்தித்து செயல்படும் நேரம் இது என சொல்லிக்கொண்டேன்.!
இப்படி எத்தனை live production bug fix செய்திருப்போம். உடனே களத்தில் இறங்கி கீபேட் தூண்டுதலுக்குப் பதிலாக நேரத் தூண்டப்பட்ட லூப்பிங் லைட் ஷோவுக்குச் செல்ல முடிவு செய்தோம்; ஸ்ரீதர் programயை மாற்றினார், நான் கீபேட் அமைப்பை அகற்றினேன். குழந்தைகளுடன் இந்த ரோலர் கோஸ்டர் அனுபவத்தை நாங்கள் அனுபவித்துக்கொண்டிருந்தபோது, இருட்டு அறையில் இருந்த நாதஸ்வரத்தில் இருந்து எனது மாமனாரை நல்ல வெளிச்சம் உள்ள அறையில் டிவி சீரியல் சகிதம் அனுப்பிவைத்தேன்; எல்லோருடைய நலனுக்காகவும் ஸ்ரீதரை குழந்தைகளிடமிருந்து சிறிது நேரம் ஒதுக்கி வைப்பது நல்லது என்று உணர்ந்தேன்! எனவே நான் குழந்தைகளை நிர்வகிக்கும் போது ஸ்ரீதரை மாமனாருடன் ஒரு நடை சென்று வர ஊக்கப்படுத்தினேன்; நான் இறுதியாக இருண்ட வெற்று வீட்டில் அமர்ந்தேன், ஒலி, ஒளி காட்சி பின்னணியில் மீண்டும் மீண்டும் ஒலித்து மின்னியது.
பல்வேறு வகையான trick or treaters சாக்லேட் விநியோகிக்க பழகியிருந்தேன்; முதலில், “மினி மாடல்” வகையராக்கள் இவர்கள் போஸ் கொடுத்து சாக்லேட் வாங்கி சென்றார்கள். பின்னர் “எபீஷியன்ட் ஏகாம்பரம்கள்” வந்தோமா சாக்லேட் வாங்கினோமா என்று காரியத்தில் கவனமாவர்கள். அடுத்து “Shrieky Silpis” வகையராக்கள், நின்று நிதானமாக ஆர அமர கதையாடி சென்றவர்கள். இந்த கூட்டத்தில் நான் அனைத்து கறுப்பு உடைகளுக்கு இடையே உள்ள மாறுபாட்டைக் கண்டறிவதில் எனது ஆர்வத்தை வெளிப்படுத்தினேன்! கூட்டமாக ஓவென கோஷமிட்டு மகிழ்ந்தார்கள்.
பல ஆண்டுகளாக ஹாலோவின் சாக்லேட் கொடுத்ததில், சாக்லேட்டை கண்களிலேயே எடைபோடும் குழந்தைகளின் ஏளனபார்வைக்கு பழகியிருந்தேன். அதிலும் “கூடையில இருக்கிற மொத்த சாக்கலேட்டையும் கொட்டுமா!” என்ற ரீதியில் சில குழந்தைகள் கொடுக்கும் மிரட்டலைலெல்லாம் நான் நைஸ் ஆண்டியாக இருந்த காலங்களில்லேயே ஏமாற்ந்து கடந்துவந்துவிட்டேன். அதிலும் சில விடாக்கொண்டன்கள், கதவை அதிரவிட்டு அதட்டி கேட்பதும் உண்டு. இப்படியாக பல ‘ரவுடி ரங்கன்கள்’ என்னுடைய பொருமைகக்கு சோதனை கொடுத்து சென்றார்கள். ஒரு வழியாக ‘மெல்ல மெல்ல வரும் சுந்தரர்கள்’ யேனோ தானோ என்று வந்தார்கள். இப்போது தான் அவர்கள் கண்ணில் நாங்கள் செய்த சாகசங்கள் கண்ணில் விழுந்தது, நல்லா இருக்கு இல்ல என்று சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.
எல்லாம் முடிந்து களைத்துப்போன போது என்னுள் இருந்த விவேகானந்தர், இந்த குழந்தைகளுக்கு அறிவுப்பாடம் எப்படி புகுத்துவது, இத்தனை இனிப்பை தேடித்திறியும் இரண்டு முதல் இருபத்திரண்டு வயது வரையான இந்த குழந்தைகளுக்கு வெரும் பாடம் எடுப்பதைத்தான்டி என்ன செய்யலாம் என யோசனையில் ஆழ்ந்தேன். இதற்கு மாற்று வழிகள்தான் என்ன? ஏன் இந்த சாக்லேட் மோகம்.
இந்த விவேக சிந்தனையில் களைப்பில் சற்று கண்ணயர்தேன். என்னுடைய குழந்தைகள் அள்ளிவந்திருந்த சாக்லேட்டேடு என்னை எழுப்பினார்கள். எங்கள் ஒவ்வொருக்கும் பிடித்த சாக்லேட்டுகளை பங்குபோட்டுக்கொண்டோம். நடக்க சென்ற ஸ்ரீதரும், மாமனனாரும் வீட்டுக்குள் நுழைந்தனர். மாமனார் நாம சும்ம நடந்து போனதுக்கு ஒரு பை எடுத்து போயிருந்தா நானும் இத்தனை சாக்லேட் கொண்டுவந்திருக்கலாமே என்று என்று சொன்னபோது. இருபத்திரண்டை திருத்த விவேகானந்தராக துடித்துக்கொண்டிருக்கும் நான் எழுபத்தியிரண்டை எப்படி சமாளிப்போன் என்று திகைத்து நின்றேன்.
https://anotepad.com/note/read/63jr8n4q