-
Continue reading →: விக்ரஹ அலங்காரம்
இன்று பெலிவியூ அனுமன் கோவிலில் அழகான வெண்ணை அலங்காரம் செய்திருந்தனர். கோவில் விக்ரஹங்கள் தெய்வீகக்கலைக்கொடுக்கும் வித்தை தெரிந்தவர்கள் இந்த அர்சகர்கள். ஒவ்வொரு கோவிலும் விதவிதமான அலங்காரங்கள் கண்டு ஆச்சர்யம் கொள்கிறேன். கலையும் தெய்வீகமும் சங்கமிக்கும் தருணங்கள். என எத்தனை எத்தனை விதமான அலங்காரங்கள். அலங்காரத்தில் கண் திறப்பது முக்கியமானது. அழித்து அழித்து சரிசெய்வதற்கு எல்லாம் காலம் இருக்காது, ஒரே முறையில் கண்கள் அழகாக வரவேண்டும். தெய்வாம்சமும் நிலைத்திருக்க வேண்டும். சவாலான…
-
Continue reading →: ஜெமோ கடிதம்சில நாட்களுக்கு முன் ஜெமோ அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவரிடமிருந்து பதில் வரும் என்று நினைத்தேன்! ஏமாற்றமே! இருந்தால் என்ன என்னளவில் நிறைவே! ஆசிரியருக்கு வணக்கம் கூன் தத்துவ முகாம் 2025-க்கு வர வாய்ப்பு கிடைத்தது மிகப் பெரிய அபூர்வம். சியாட்டில் நண்பர்கள் பிரதாப், ஸ்ரீனிசங்கர், மதன் மற்றும் சௌந்தர் ஆகியோருக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். முகாம் மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. நான்கு நாட்களும் பெரும் தவம்…
-
Continue reading →: Boone, NC
திரு. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தத்துவ முகாம் செல்லும் வாய்ப்பு அமைந்தது. நான்கு நாட்கள் நடந்த தத்துவ வகுப்பு இந்திய தத்துவப்பரப்பின் ஒட்டுமெத்த வரைபடத்தை, வரலாற்றை வழங்கியது. வேதகாலம் தொடங்கி நவவேதாந்தம் வரையிலான வரலாறு, தத்துவங்களின் வளர்ச்சி என ஒவ்வொன்றும் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டது. ஜெயமோகன் அவர்களின் தெளிவான உரை, ஒழுங்கில் அமைந்த வகுப்பு விளக்கங்கள் என மிகச்சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு தலைப்பிற்கும் விளக்கங்களும் சமகால எடுத்துக்காட்டுக்களும் பொருத்தமாக இருந்தன. நிச்சயம்…
-
Continue reading →: ஓவியர் வேதா
சில நேரங்களில் புத்தகம் தானாக வந்தடைகிறது. அப்படித்தான் ஸ்ரீலலிதா புத்தகம் என்னை வந்தடைந்தது. தத்துவவிசாரங்கள், சிறுகதைகள் தான் என் வாசிப்பு தேர்வு. ஏனோ இந்த புத்தகம் வாசிக்கத்தெடங்கி முழுதும் முடித்தேன். தொன்மக்கதைகள், லலிதா சகஸ்ரநாம விளக்கம் என விரிந்த புத்தகம் தேவி உபாசக மனநிலையை கொண்டுவந்தது. எளிமையான மொழியில் இருந்த புத்தகத்தின் படங்கள் மிகசிறப்பாக இருந்தது. புத்தகத்திற்கு பெரும் பங்களிப்பை அளித்த படங்களை வரைந்த வேதா அவர்களின் பெயரும் புத்தகத்தின்…
-
Continue reading →: Janani Janani song
சில திரைப்பாடல்கள் சந்த நயத்துடன் அற்தம் பொதிந்ததாக அமைகிறது, அவ்வகையில் கவிஞர் வாலி அவர்கள் எழுதிய ஜனனி ஜனனி என்ற பாடல் கொல்லூர் மூகாம்பிகையை பற்றிய நல்ல பாடல். ஆண் : சிவஃ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்தஃ ப்ரபவிதும்…ன சேதேவம் தேவோ ன கலு குசலஃ ஸ்பன்திதுமபி… ஆஆ…அதஸ்த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரின்சாதிபி ரபி…ப்ரணன்தும் ஸ்தோதும் வா கத-மக்ர்த புண்யஃ ப்ரபவதி… ஆஆ… ஆண் :…
-
Continue reading →: மயங்கொலி
தமிழில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ஒலிக்கும் எழுத்துக்கள் இல்லாமல் இருந்தால் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பது இன்னும் எளிதாகும். மனப்பாடம் செய்வதைத் தவிர வேறு உபாயம் தெரியவில்லை. சில இலக்கண விதிகள் இருந்தாலும். பல வார்த்தைகள் இந்த ஒலி வேறுபாட்டில் முற்றிலும் வேறு பொருள் தருபவை. இவற்றை மாணவர்கள் மனப்பாடம் தான் செய்ய வேண்டியுள்ளது. ல, ள, ழ ல ள ழ அவல் அவள் வால் வாள் வாழ் குலம் குளம்…
-
Continue reading →: The Broken Car and the Farmer
எங்கள் இலக்கிய மாலை குழுவில் நண்பர் மதன் இந்த கதையை பகிர்ந்தார். பல நேரங்களில் நிதானமும் தியான நிலையும் அமையப்பெறாததினால் ஒரு சாதாரண நிகழ்வை நாம் சிக்கலாக மாற்றிவிடுகிறோம். அதிக யோசனை — ஓஷோவின் கதை ஒரு மனிதன் இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தான். வழியில் திடீரென கார் பழுதாகி நின்றது.அவன் பார்த்தான் — அருகில் யாரும் இல்லை, கிராமப்புறம். தூரத்தில் ஒரு வீட்டில் மட்டும் விளக்கு எரிந்து…
-
Continue reading →: Stories of True
Jeya Mohan’s story collection, Stories of the True (titled Aram அறம் in Tamil) got released in Seattle 10/18. Here is the Q&A conversation features the author, Jeymohan, moderated by Madan Kumar and Joshna. Book’s Theme and Impact What sort of emotional or moral journey would you believe or hope that…
-
Continue reading →: Jeyamohan at Seattle
நேற்று எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுடனான சந்திப்பு கற்றல் நிறைந்த தருணமாக அமைந்தது. கலந்துரையாடலில் நான் பெற்றவை. நகைச்சுவை நகைச்சுவை கதை என்ற வகையில் ஆழமாக காலத்தால் அழியாத காட்சிகளைப் படைத்ததில் தி.ஜானகிராமன் கதைகள் முக்கியமானவை. 3 கிழவர்கள், கோதாவரி குண்டு, சர்வர் மனைவியின் ஏழாவது பிரசவம் என பல இன்றும் அந்த மாந்தர்களை, காட்சிகளை கண்ணில் நிறுத்துகிறது. சாவி, கல்கி, தேவன், கொனஷ்டை, சுஜாதா என பலரும் நகைச்சுவை கதைகள்…
-
Continue reading →: அந்துமணி
பள்ளிப் படிப்பைத் தாண்டி எதுவும் வாசித்ததில்லை. காலை செய்தித்தாள் முடித்திருக்கும் கடையில் வாசிப்பது, அதுவும் துணுக்குப் படிப்பது, அதில் ஆறு வித்யாசம் பகுதியை காண்பது என்றுதான் இருந்தது. ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன், அப்போதுதான் இந்த தினமலர் ‘பா.கே.ப.’ பகுதியை வாசிக்கும் பழக்கம் வந்தது. வாரமலரில் இதனை முதலில் வாசிப்பது என்றுதான் தொடங்கியது என் பள்ளிப் படிப்பைத் தாண்டிய வாசிப்பு அனுபவம். எளிய செய்தி, சுவாரஸ்யமாக எழுதலாம், வாழ்வில் நடக்கும்…


