• சியாட்டில் நகரின் நடுவில், ஓங்கி உயர்ந்த கோபுரங்களாய் கட்டிடங்கள். முப்பது, நாற்பது மாடிக்கட்டிடங்கள். அதில் வாழும் ஒரு தம்பதியரை நானும் என் நண்பனும் காணச்சென்றோம். அந்தப் பெண் எங்கள் இருவரையும் வாசலிலிருந்து அழைத்துச் சென்று பெரிய கதவுகளைத் திறந்து, ஆக்சிஸ் கோடை அழுத்தி அடுத்த கதவை திறந்து, மிக நீண்ட வராண்டாவில் கொஞ்சம் ‘லாங் வாக் தான்!’ என்று சொன்னவாரே அழைத்துச் சென்றாள். எனக்கு என்ன வயதாகிவிட்டது என்னை இப்போதெல்லாம்…

    Continue reading →: நல்வரவு
  • ஜோதிடம் என்பது அறிவியல், கோள்களின் சஞ்சாரம் மனித வாழ்வை பாதிக்கிறது. சனி, புதன், வெள்ளி என ஒவ்வொரு கோள்களின் அறிவியல் சொல்லும் தன்மையும் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள தன்மைகளும் ஒத்துப் போவதை நாம் காணலாம். ‘நாள் செய்யாததைக் கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததைக் குலதெய்வம் செய்யும்’ என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. ”முப்பது வருஷம் வாழ்ந்தவனும் இல்லை; முப்பது வருஷம் தாழ்ந்தவனும் இல்லை”. ”சரியான ஏழரையா போயிடுச்சு”. ”குரு பலன் வந்தால்…

    Continue reading →: ஜோதிட அறிவியல்
  • ஆண்களை விட நடைப்பயிற்சி, ஓட்டம் என உடற்பயிற்சி செய்யும் பெண்கள் குறைவே. அதிலும் மலையேற்றம் செய்யும் பெண்கள் வெகு சிலரே.  பொதுவாகக் குழந்தைகளுடன் குடும்பத்துடன் ஒரு குட்டி மலையேற்றம் (Hiking) சென்று­வரும் பெண்கள் தான் அதிகம்.  வெகுசிலரே தொடர்ந்து சவாலான மலை­யேற்றங்கள் செய்வார்கள், அதிலும் இந்தியப் பெண்கள் குழுவாக இணைந்து தொடர்ந்து மலைப்பயணம் செய்வது என்பது அரிது.  இது அப்படிப்பட்ட அசாத்திய பெண்ணின் கதை. ராஜி வழக்கமான குடும்பப் பெண்களைப்போல்…

    Continue reading →: மலைக்க வைக்கும் மங்கையர்கள்
  • காஞ்சிபுரம், கீழண்ட மாடவீதியில் வரதராஜ பெருமாள் கோவில் கீழ் கோபுரத்திற்கு எதிரில் பழைய பயன்பாட்டில் இல்லாத மடம் ஒன்று இருந்தது. மணவாள ஜியர் மடம் என்ற பெயர் பலகை இருக்கும். தெரு மூளையில் இருந்த அந்த மடத்திற்கு கீழண்ட மாட தெருவில் ஒரு வாசலும், நைனார் தெருவில் ஒரு வாசலும் இருக்கும். கற்த்தூண்களால் ஆன அந்த மண்டபத்தில் மிகப்பெரிய திண்ணைகள் இருக்கும். கட்டிடத்தின் மேலே சின்ன சின்ன செடிகள் முளைத்து…

    Continue reading →: பரிதாபங்கள்
  • பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா என பாரதி உருகியதற்கு இணங்க! தமிழகத்தை காக்க வந்த தெய்வம் நீ! என் தலைவன் நீ! வெற்றித்திருமகன் நீ! என இரசிகப்பட்டாளம் தன் தலைவனை தலையில் வைத்துக்கொண்டாடி வரவேற்றது. அவன் அசைவுகளுக்கு சிலாகிக்கும் கூட்டத்தில் எந்த பரபரப்பும் இன்றி வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்தேன். பணிவு, தீராத ஆர்வம், எளிமை என தன்னை மெல்ல அடையாளப்படுத்தினார் அவர்! நன்றியை, நம்பிக்கையை…

    Continue reading →: வரம்
  • பொம்மைகளைச் சேகரித்துப்படி அமைப்பை உருவாக்கிஅலங்காரமாய் துணி விரித்து கலசம் ஸ்தாபித்து, பூஜித்துநேர்த்தியாய் பொம்மைகளை வைத்துஅலங்காரமாய் விளக்கு அமைத்துசின்னதொரு பூங்காமாதிரி விளைவித்துஅழகான மாக்கோலமிட்டு நித்தம் சில நண்பர்களை அழைத்துச்சுண்டல் வகைகளாய் நைவேத்யம் வைத்துமுகம் மலர விருந்தினரை வரவேற்றுசுவையான உணவு தந்துதெய்வீக காணம் பாடிமஞ்சளும் குங்குமமும் பரிசும் தந்து அதுபோல் அழைத்த வீடு சென்றுவந்துஒன்பது நாளும் மங்களமாய் அமையஎத்தனை எத்தனை சிரத்தைகள்அவன் அருள் நிறைவதாலேயேஅத்தனையும் அரங்கேறி நமை மகிழ்விக்கிறது! உலகம் யாவையும் தாம்…

    Continue reading →: கொலு
  • சமீபத்தில் என் மாமனாரிடம் கேட்டேன் எங்கள் USA, சியாட்டில்  கோவில்கள் எப்படி இருக்கிறது என்று. கொலுபெம்மைகள் வைத்தது போல இருக்கிறது என்றார்.  உண்மைதான், என்னதான் நாம் நிறையக் கோவில்கள் சியாட்டிலில் இருக்கிறது என்று பெருமை பேசினாலும், தமிழக கோவில்கள் தரும் உணர்வை அது தருவதில்லை என்பது உண்மை. உயர்ந்த கோபுரத்தை அன்னாந்து பார்த்து அதன் உயரத்தில் இருக்கும் கலசங்களின் வரிசையைத் தரிசிப்பதும். அந்த கோபுரத்தில் 5 அடுக்கு 7 அடுக்கு என அது பல நிலைகளாக நிறைந்து ஒவ்வொரு…

    Continue reading →: ஆலயதரிசனம்
  • சத்வ , தாமஸ, ரஜோ குணங்கள் தான் மனிதனை வெவ்வேறு வகையில் செயல்படுபவர்களாக மாற்றுகிறது என்கிறது கீதை. இந்த மூன்று குணங்களின் கலவை எப்படி அமைந்திருக்கிறது என்பதைச் சிலரிடம் மிக எளிதில் கண்டு விட முடியும். காஞ்சிப்பெரியவர், வேதாத்திரி மகரிஷி, ரமணர் என சில மனிதர்களை நினைக்கையிலேயே ஒரு அமைதி மனதில் குடிகொள்ளும். சத்வ குணம் மேலோங்கிய மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் சில மணி நேரங்கள் உரையாட நேரம் கிடைப்பதும்…

    Continue reading →: சச்சிதானந்தம்
  • இராமசுப்புவைப்போல வாழ்க்கையை சுவைக்க சுவைக்க சொல்ல ஈலோகத்தில் ஆளில்லா. அந்த ஏழு நாட்கள் படம் எப்படி ஒரு மாஸ்டர் பீசோ அது போல அவருடன் அரட்டை அடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சுகானுபவம். இவர் எப்படித்தான் இப்படி கனியிடை ஏறிய சுளையைப்போல பேசுகிறார்? அதை எப்படி காப்பி அடிப்பது? என யோசித்தேன். அவர் பேசியதை எல்லாம் இரகசியமாக குறிப்பெடுத்(தேன்). மகரந்தத் தேனை தேனீ உறிஞ்சுவதுபோல் எடுப்பதுபோல் காரியத்தில் இறங்கினேன், காதுகளை…

    Continue reading →: Ode to Ramasubbu
  • ஐந்து மைல் நீளத்திற்குக் கடலுக்கு நடுவே நிலம், இரண்டு புறமும் அலையடிக்க இருக்கும் இதமான சூழலில் நடந்துவருவோம் வாருமென்றார் நண்பர். அலைகள் அதிகமாகும் காலத்தில் இந்த நிலப்பரப்பே மூடிக்கொள்ளும், ஐந்து மைல் நடந்தால் அந்தக் காலத்துக் கலங்கரைவிளக்கம் இருக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டுவரும் அதன் மீதிருந்து கடல் அழகை இரசிக்கலாம் என்றதும், மாட்டேன் எனச் சொல்ல மனம் வரவில்லை! மேலும் குஜராத் மாநிலத்தின் நிஷ்கலந்த் மஹாதேவ் கோவில், ராமேஸ்வரம் நினைவுக்கு வந்தது.…

    Continue reading →: Hiking to the Lighthouse, Sequim, WA
Design a site like this with WordPress.com
Get started