• சத்வ , தாமஸ, ரஜோ குணங்கள் தான் மனிதனை வெவ்வேறு வகையில் செயல்படுபவர்களாக மாற்றுகிறது என்கிறது கீதை. இந்த மூன்று குணங்களின் கலவை எப்படி அமைந்திருக்கிறது என்பதைச் சிலரிடம் மிக எளிதில் கண்டு விட முடியும். காஞ்சிப்பெரியவர், வேதாத்திரி மகரிஷி, ரமணர் என சில மனிதர்களை நினைக்கையிலேயே ஒரு அமைதி மனதில் குடிகொள்ளும். சத்வ குணம் மேலோங்கிய மனிதர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் சில மணி நேரங்கள் உரையாட நேரம் கிடைப்பதும்…

    Continue reading →: சச்சிதானந்தம்
  • இராமசுப்புவைப்போல வாழ்க்கையை சுவைக்க சுவைக்க சொல்ல ஈ இலோகத்தில் ஆளில்லை. அந்த ஏழு நாட்கள் படம் எப்படி ஒரு மாஸ்டர் பீசோ அது போல அவருடன் அரட்டை அடிக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு சுகானுபவம். ஒரு நாள் இவர் எப்படித்தான் இப்படி கனியிடை ஏறிய சுளையைப்போல பேசுகிறார் அதை எப்படி காப்பி அடிப்பது என யோசித்தேன். அவர் பேசியதை எல்லாம் இரகசியமாக குறிப்பெடுத்(தேன்). பனிமலர் ஏறிய தேனை வண்டு எடுப்பதுபோல்…

    Continue reading →: Ode to Ramasubbu
  • ஐந்து மைல் நீளத்திற்குக் கடலுக்கு நடுவே நிலம், இரண்டு புறமும் அலையடிக்க இருக்கும் இதமான சூழலில் நடந்துவருவோம் வாருமென்றார் நண்பர். அலைகள் அதிகமாகும் காலத்தில் இந்த நிலப்பரப்பே மூடிக்கொள்ளும், ஐந்து மைல் நடந்தால் அந்தக் காலத்துக் கலங்கரைவிளக்கம் இருக்கிறது. நன்கு பராமரிக்கப்பட்டுவரும் அதன் மீதிருந்து கடல் அழகை இரசிக்கலாம் என்றதும், மாட்டேன் எனச் சொல்ல மனம் வரவில்லை! மேலும் குஜராத் மாநிலத்தின் நிஷ்கலந்த் மஹாதேவ் கோவில், ராமேஸ்வரம் நினைவுக்கு வந்தது.…

    Continue reading →: Hiking to the Lighthouse, Sequim, WA
  • அமெரிக்காவில் கார் லைசென்ஸ் வாங்குவது என்பது அத்தனை எளிதானது அல்ல. எழுத்து தேர்வு, வாகன இயக்க தேர்வு என இரு பகுதி தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இதில் முதல் முயற்சியிலேயே தேர்வது என்பது கடினமே. ஓரிரு புள்ளிகளில் தவறவிட்டு மீண்டும் தேர்வு எழுதியவர்களே அதிகம். அதிலும் நான் ஐந்து வருடங்களாக ஹைதராபாத், சென்னை போன்ற நெரிசல் நிறைந்த நகரங்களில் கார் ஓட்டிய பயிற்சி இருந்தும் இந்த தேர்வு சற்று சவாலாகவே…

    Continue reading →: நன்னாள்!
  • தெய்வங்கள் எல்லாம் தோற்றதோ!விதி என ஒதுங்கவோ! கதி ஏது என தவிப்பவர்நிலை கானவோ! காலம் காயமாற்றும் எனமனம் தேற்றவோ! நிலையில்லா உலகு எனதோய்ந்து போகவோ! வருவதும் போவதும் தானேஉயிர் நிலை எனகடந்து போகவோ! ஓயாமல் உரையாடும்மனதை சொல்லி அமைதியாக்க! மரணங்கள் மனங்களில்இரணங்களை உண்டாக்கிவடுவாய் தங்கிவிடுகிறது! இருகிவிடும் இதயம்பங்கேற்பாளனாய் உள்ளவனைபார்வையாளனாய் மாற்றிவிடுகிறது. -குரு, பிப்ரவரி 1, 2022

    Continue reading →: மணி
  • கலை பார்வையாளனை இரசிகனாக்குகிறது. தன்னை மறந்து இரசிக்க வைக்கிறது. கலைஞனிடம் இரசிகன் தன்னை முழுதும் தந்து மகிழ்வை சுவைக்க தொடங்குகிறான். இன்றைய கரகாட்ட நடனம் அந்த அனுபவத்தைத் தந்தது. “கரகாட்டம் நல்லா ஆடராங்க இல்ல!” என்று தொடங்குகியது! பார்வையாளனாக இருந்த நான் சற்று நேரத்தில் இரசிகனாக மாறினேன். ஒய்யார நடனம்! ஒழுங்கில் அமைத்த அனைவரின் வரிசை! இரசித்து, சிரித்த முகத்துடன் ஆசை ஆசையாய் ஆடுவதை காண்கையில் தொற்றிக்கொள்கிறது கலைமீதான ஈர்ப்பு.…

    Continue reading →: கரகம்
  • இளங்காதலர்கள்!இணைபிரியா தம்பதியர்! கனிவான பேச்சால் கவரும் இவன்!அன்பான பாசத்தால் பினைக்கும் இவள்! பழகியவர் அனைவரின் நெஞ்சங்களிலும் பதிந்திடும் இவர் இருவரின் புன்னகையும்! உடல் வலிமை! ராணுவ ஆர்வம் என்று ஓரு பக்கம்கவிதை! இலக்கியம்! சமூக பணி என ஓரு பக்கம் ஒருவருக்கு ஒருவர் பங்களித்துஇருவர் ஒருவராய் வளம்வரும்இளைய நற்தம்பதியர்! நினைவுகளிலும், பேச்சிலும் ஓயாத ஆவல்என்று இருகுடும்பம் இணையும் என்றே!பெருவிருப்பம் இந்த நேசபறவகளுக்கு! அயல் தேசத்தில் குடிபுகுந்துஅசலாய் வாழ்வதே பெருமுயற்சி அதில்அத்தனை…

    Continue reading →: சீமந்தம்
  • பணி என்றே சொல்லிடுவார்!ஊதியதிற்கே அது என்றிடுவார்!ஊக்கம் தரும் சொற்களைஉன்னால் முடியும் எனும் நீட்சிகளை!சினங்காக்கும் பயிற்சியினைபொருப்புகள் தந்த முதிர்சியைஅனுவங்கள் தந்த பக்குவத்தைவிதவிதமான மனிதர்களைஅவர்களின் அசாத்திய மனங்களைஎன எத்தனை எத்தனை பணிக்குள்பெரும் வாழ்நாள் அனுபவம்இந்த பத்து வருடம்!!

    Continue reading →: பணி
Design a site like this with WordPress.com
Get started