வானம் பார்த்த
வஸ்துவெல்லாம் வெள்ளுடையில்
தன்னை மறைத்துக்கொண்டது…
சக்கரைத்தான் தூவின்றோ…
அரைத்த உப்பைத்தான் வீசினறோ…
தெர்மாகோலைத்தான் உதிர்த்தனறோ…
கோலமாவை கொட்டித்தான் விட்டனறோ…
வீதி எங்கும் வெண்மைக் கோலம்…
யார் வருகையை வரவேற்க
வீதி எங்கும் பனிப்பஞ்சு அலங்காரம்?
புட்டா இல்லாத கறையில்லா புடவையை
இத்தனை சீக்கிரத்தில் நெய்தது யார்?
நீரில்லாமல் நுறையை மட்டும் செய்யும் கலையை இரகசியமாய் வைத்தது யார்?
இது என்ன புதுமை
இரவு இருட்டில் வெள்ளை வெளிச்சம்
புத்தம் புது சாலைகள்
முதல் முத்தம் தந்து
பாதம் பதிப்பாறோ இல்லை
சக்கரத்தை சுழற்றி தடம் பதிப்பாறோ
புண்ணியம் செய்த பனி
பனி மனிதனாகி அலங்காரம் கொண்டது
பாவம் சில பனி மிதிபட்டு சேறாய் போனது.
குரு
1/12/2020